தமிழ்நாடு

லண்டன் சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-05-01 04:51 GMT   |   Update On 2024-05-01 06:57 GMT
  • தேர்தலின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து அவர் வாக்களித்தார்.
  • தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலை உள்ளது.

சென்னை:

தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போகாத ஊர்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்று 24 நாட்களாக பிரசாரம் செய்திருந்தார்.

தமிழ்நாடு முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிகளில் 8,465 கிலோ மீட்டர் பயணம் செய்து 122 பிரசார முனைகளில் 3,726 நிமிடங்கள் பேசி மக்களை கவர்ந்தார். அவரது பேச்சை இறுதி வரை கலையாமல் மக்கள் ரசித்து கேட்டனர்.

தேர்தலின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து அவர் வாக்களித்தார்.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 நாள் பயணமாக லண்டன் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து நேற்று காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார்.

ஓய்வுக்காக லண்டன் சென்றுள்ளதால் அவரது பயண நிகழ்ச்சிகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் 10-ந்தேதி சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News