செய்திகள்
3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - ஏ.சி.சண்முகம்
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் கூறினார்.
வேலூர்:
வேலூர் மக்களவை தொகுதிக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வள்ளலார் நகரில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எந்த வேலையாக இருந்தாலும் ஒத்திவைத்துவிட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை. 100 சதவிகித வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும்.
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் மக்களவை தொகுதிக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வள்ளலார் நகரில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எந்த வேலையாக இருந்தாலும் ஒத்திவைத்துவிட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை. 100 சதவிகித வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும்.
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.