செய்திகள்
ஏசி சண்முகம்

புதிய நீதிகட்சி தலைவராக இருந்தாலும் அதிமுகவில் உறுப்பினராக உள்ளேன் - ஏ.சி.சண்முகம்

Published On 2019-07-20 05:12 GMT   |   Update On 2019-07-20 05:12 GMT
புதிய நீதிகட்சி தலைவராக இருந்தாலும் அதிமுகவில் உறுப்பினராக உள்ளேன் என்று வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறினார்.
குடியாத்தம்:

வேலூர் தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குடியாத்தம் பிச்சனூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது, அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஏ.சி.சண்முகம் பிரசாரத்தை உடனடியாக நிறுத்திவிட்டு கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரது மனு ஏற்கப்பட்டதாக கூறப்பட்டது. இதைதொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நான் புதிய நீதிக்கட்சி தலைவராக இருந்தாலும் அ.தி.மு.க. உறுப்பினர் என்பதற்கான அடையாள அட்டை வேட்புமனுவில் கொடுத்துள்ளேன். துரைமுருகன் கூட்டத்தினர் சலசலப்பை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள். எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மேடை, மேடையாக அழுகிறார், அதற்காக நாடகம் ஆடுகிறார்.

தேர்தலையொட்டி அவரது மகனை லாரி ஏற்றி கொல்ல சதி செய்யப்பட்டதாக கற்பனையாக பொய் சொல்கிறார்.

இதன் மூலம் மக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்பட வேண்டும் என நினைக்கிறார். நாங்கள் ஜனநாயக ரீதியாக மக்களை சந்தித்து வெற்றி பெறுவோம். தோல்லி பயத்தால் துரைமுருகன் நாடகம் ஆடி பொய் பிரசாரம் செய்து வருகிறார் என்றார்.
Tags:    

Similar News