இந்தியா

மணிப்பூர் மறுதேர்தலில் 81 சதவீத வாக்குப்பதிவு

Published On 2024-05-01 03:17 GMT   |   Update On 2024-05-01 03:17 GMT
  • வாக்குச்சாவடி கைப்பற்றுதல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்தன.
  • 3 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இம்பால்:

மணிப்பூர் மாநிலம் அவுட்டர் மணிப்பூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 26-ந் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது, சில வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. வாக்குச்சாவடி கைப்பற்றுதல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்தன.

அதனால், 3 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. நேற்று மறுவாக்குப்பதிவு நடந்தது. 81 சதவீத வாக்குகள் பதிவாகின.

Tags:    

Similar News