செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

Published On 2019-07-28 12:20 GMT   |   Update On 2019-07-28 12:53 GMT
ஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா? என்று வேலூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். 

தமிழகத்தில் அரை மணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என்று நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா? நாங்கள் நினைத்தால் அரசியலில் இருந்து ஸ்டாலினை வெளியேற்ற முடியும். ஆட்சி அமைக்க முக ஸ்டாலினுக்கு ஜாதகம் பொருத்தம் இல்லை. வாரிசு அரசியலால் திமுகவிற்கு இனி வளர்ச்சி இருக்காது. டெல்லி சென்றுள்ள திமுக எம்பிக்கள் காந்தி சிலை முன் போராட்டம்தான் நடத்துகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
Tags:    

Similar News