சமையல்

வெயிலுக்கு ஏற்ற வெந்தய கஞ்சி...

Published On 2024-05-07 11:43 GMT   |   Update On 2024-05-07 11:43 GMT
  • நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
  • எல்லாரும் வீட்டிலும் இருக்க கூடிய ஒன்றாக இருப்பது வெந்தயம் தான்.

இந்த வெயிலுக்கு என்ன சாப்பிடுவது, உடலை எப்படி குளிர்ச்சியாக வைத்து கொள்வது எப்படி என்று ஆராய்ந்து கொண்டிருப்பீர்கள். ஏனென்றால் வெயில் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இதனால் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வெயில் காலத்தில் அம்மை, காய்ச்சல், வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள குளிர்ச்சியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உணவாகவும், எல்லாரும் வீட்டிலும் இருக்க கூடிய ஒன்றாக இருப்பது வெந்தயம் தான். இந்த வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. அதற்கு தான் வெந்தயத்தை வைத்து கஞ்சி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

தேவையான பொருட்கள்:

வெந்தயம்- 3 தேக்கரண்டி

பச்சரிசி- 1 கப்

பாசி பருப்பு- 2 கப்

தேங்காய் - 1/2 மூடி

பூண்டு - 6 பற்கள்

செய்முறை:

முதலில் ஒரு கப் பச்சரிசி எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் 2 கப் பாசி பருப்பு, 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து 3 முறை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.

பின் இதனை ஒரு குக்கர் அல்லது பாத்திரத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு 3 கப் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். பூண்டு பற்கள் 6 சேர்த்து கொள்ள வேண்டும். இதனை வேக விட வேண்டும். குக்கரில் வைத்தால் 4 விசில் விட வேண்டும்.

அதுவே நீங்கள் பாத்திரத்தில் வைத்தால் தண்ணீர் குறையும் வரை வேக விட வேண்டும். அரிசியானது அளவாக வெந்திருக்க வேண்டும்.

பிறகு 1/2 மூடி தேங்காய் எடுத்து திருகி கொள்ள வேண்டும், இதனை அரைத்து பாலாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த தேங்காய் பாலை வேக வைத்த அரிசியில் சேர்த்து கலந்து விட வேண்டும்.

இந்த கஞ்சியை காலை நேரத்தில் சாப்பிடுவது நல்லது. இரவு மற்றும் மதிய நேரத்தில் இந்த கஞ்சியை எடுத்து கொள்ளாதீர்கள்.

Tags:    

Similar News