கிரிக்கெட்

பட்டைய கிளப்பிய பஞ்சாப்- 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்த சிஎஸ்கே

Published On 2024-05-05 11:58 GMT   |   Update On 2024-05-05 11:58 GMT
  • சென்னை அணியில் துபே மற்றும் டோனி 0 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
  • பஞ்சாப் தரப்பில் ராகுல் சாஹர், ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதலாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அணி பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சென்னையின் தொடக்க வீரர்களாக ருதுராஜ்- ரகானே களமிறங்கினர். ரகானே 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டெரில் மிட்செல் ருதுராஜூடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். 32 ரன்னில் ருதுராஜ் அவுட் ஆனார். அடுத்து வந்த துபே கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

அடுத்த சிறிது நேரத்தில் மிட்செல் 30 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். மொயின் அலி 17, சாட்னர் 11, ஷர்துல் தாகூர் 17, டோனி 0, என ஆட்டமிழந்தனர். இறுதி அதிரடி காட்டிய ஜடேஜா 43 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ராகுல் சாஹர், ஹர்சல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags:    

Similar News