என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்ச் 26-28 தேதிகளில் எகிப்தில் அதிபர் தேர்தல்
Byமாலை மலர்20 Jan 2018 8:27 PM GMT (Updated: 20 Jan 2018 8:27 PM GMT)
எகிப்து நாட்டில் வரும் மார்ச் மாதம் 26-28 தேதிகளில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாக தற்போதைய அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டார்.
கெய்ரோ:
எகிப்து நாட்டில் வரும் மார்ச் மாதம் 26-28 தேதிகளில் அதிபர் தேர்தல் நடக்கிறது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போதைய அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி நேற்று முன்தினம் வெளியிட்டார். இந்த தேர்தலில் தான் இரண்டாவது மற்றும் இறுதிமுறையாக போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரை எதிர்த்து முன்னாள் ராணுவ தளபதி சமி அனன் போட்டியிடப்போவதாக நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், “தவறான கொள்கைகளில் இருந்து எகிப்து நாட்டைக் காப்பாற்றத்தான் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்” என கூறி உள்ளார்.
தேர்தலில் அனைவருக்கு இடையேயும் சம நிலை பராமரிக்கப்பட வேண்டும் என்று அவர் அரசு அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட விரும்புகிற வேட்பாளர்கள் பதிவு உடனடியாக தொடங்கி உள்ளது. இந்த மாதம் 29-ந் தேதி வேட்பாளர்கள் பதிவு நிறைவு பெறு கிறது.
மார்ச் மாதம் 26-28 தேதிகளில் நடக்கிற வாக்குப்பதிவில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெறாவிட்டால், இரண்டாம் சுற்று தேர்தல், ஏப்ரல் மாதம் 24-26 தேதிகளில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்து நாட்டில் வரும் மார்ச் மாதம் 26-28 தேதிகளில் அதிபர் தேர்தல் நடக்கிறது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போதைய அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி நேற்று முன்தினம் வெளியிட்டார். இந்த தேர்தலில் தான் இரண்டாவது மற்றும் இறுதிமுறையாக போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரை எதிர்த்து முன்னாள் ராணுவ தளபதி சமி அனன் போட்டியிடப்போவதாக நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், “தவறான கொள்கைகளில் இருந்து எகிப்து நாட்டைக் காப்பாற்றத்தான் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்” என கூறி உள்ளார்.
தேர்தலில் அனைவருக்கு இடையேயும் சம நிலை பராமரிக்கப்பட வேண்டும் என்று அவர் அரசு அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட விரும்புகிற வேட்பாளர்கள் பதிவு உடனடியாக தொடங்கி உள்ளது. இந்த மாதம் 29-ந் தேதி வேட்பாளர்கள் பதிவு நிறைவு பெறு கிறது.
மார்ச் மாதம் 26-28 தேதிகளில் நடக்கிற வாக்குப்பதிவில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெறாவிட்டால், இரண்டாம் சுற்று தேர்தல், ஏப்ரல் மாதம் 24-26 தேதிகளில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X