என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கத்தரிக்காயை வெடிகுண்டு என நினைத்து முதியவர் செய்த போனால் பரபரப்பு
Byமாலை மலர்4 Nov 2017 9:47 AM GMT (Updated: 4 Nov 2017 9:47 AM GMT)
ஜெர்மனியில் வீட்டின் பின்புறம் கிடந்த பெரிய கத்தரிக்காயை வெடிகுண்டு என எண்ணி போலீசுக்கு முதியவர் ஒருவர் தொலைபேசியில் தகவல் அளித்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
பெர்லின்:
ஜெர்மனியில் உள்ள கார்ல்சூ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய 81 வயது முதியவர் தன் வீட்டின் பின்புறம் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கிடப்பதாக கூறியுள்ளார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து அவர் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டின் பின்புறம் சோதனை செய்து பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அங்கு 40 செ.மீ. நீளமுள்ள கத்தரிக்காய் கிடந்துள்ளது. அதனை வெடிகுண்டு என எண்ணி போலீசாருக்கு போன் செய்துள்ளார்.
கத்தரிக்காயை யாரோ அடையாளம் தெரியாத நபர் அவர் வீட்டில் போட்டுள்ளார். அதனால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டது. சோதனை செய்த பின்னர் போலீசார் கத்தரிக்காயை அப்புறப்படுத்தினர்.
இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் ஜெர்மனியில் அடிக்கடி கண்டெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் உள்ள கார்ல்சூ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய 81 வயது முதியவர் தன் வீட்டின் பின்புறம் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கிடப்பதாக கூறியுள்ளார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து அவர் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டின் பின்புறம் சோதனை செய்து பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அங்கு 40 செ.மீ. நீளமுள்ள கத்தரிக்காய் கிடந்துள்ளது. அதனை வெடிகுண்டு என எண்ணி போலீசாருக்கு போன் செய்துள்ளார்.
கத்தரிக்காயை யாரோ அடையாளம் தெரியாத நபர் அவர் வீட்டில் போட்டுள்ளார். அதனால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டது. சோதனை செய்த பின்னர் போலீசார் கத்தரிக்காயை அப்புறப்படுத்தினர்.
இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் ஜெர்மனியில் அடிக்கடி கண்டெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X