என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு
Byமாலை மலர்4 Oct 2017 10:12 AM GMT (Updated: 4 Oct 2017 10:12 AM GMT)
உலகின் உயர்ந்த விருதான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் வேதியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஸ்டாக்ஹோம்:
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுவருகிறது. பரிசுகளை நோபல் பரிசுக்குழு தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்து வருகிறார். நேற்று முன்தினம் மருத்துவத்துக்கான நோபல் பரிசும், நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது.
இன்று 2017ம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசானது 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக ஜாக்கெஸ் டெபோசே, ரிச்சர்ட் ஹேண்டர்சன், ஜோசிம் ஃபிராங்க் ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிச்சர்ட் ஹேண்டர்சன் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர். ஜோசிம் ஃபிராங்க் அமெரிக்காவை சேர்ந்தவர். ஜாக்கெஸ் டெபோசே சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X