search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினந்தோறும் 6 மணி நேரம் தூங்காவிட்டால் நோயால் உயிரிழப்பு ஏற்படும் எச்சரிக்கை தகவல்
    X

    தினந்தோறும் 6 மணி நேரம் தூங்காவிட்டால் நோயால் உயிரிழப்பு ஏற்படும் எச்சரிக்கை தகவல்

    தினந்தோறும் 6 மணி நேரம் தூங்காவிட்டால் நோயால் உயிரிழப்பு ஏற்படும் என எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டுள்ளது.
    நியூயார்க்:

    அதிகபட்சமாக தினசரி 8 மணி நேரம் நன்றாக அயர்ந்து தூங்கினால் உடலுக்கு நல்லது என்ற பொதுவான கருத்து உள்ளது. தற்போது குறைந்தது தினந்தோறும் 6 மணி நேரத்துக்கு குறையாமல் தூங்க வேண்டும்.

    இல்லாவிடில் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்பு அபாயம் உருவாகும் என்ற எச்சரிக்கை தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அதில் 6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கியவர்கள் நீரிழிவு, அதிகபட்ச ரத்த அழுத்தம், மற்றும் உடல் பருமன் நோய்கள் ஏற்படும்.

    அதன் மூலம் 2 மடங்கு உயிரிழப்பு அபாயம் உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தூக்கம் குறைவதால் இருதய நோய்கள், பக்க வாதம், மூளையில் பாதிப்பு போன்றவையும் உருவாகும். எனவே நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×