என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘அ.தி.மு.க. அம்மா’ பெயரை பயன்படுத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்போம்: டிடிவி தினகரன்
Byமாலை மலர்17 Jan 2018 5:44 AM GMT (Updated: 17 Jan 2018 5:44 AM GMT)
‘அ.தி.மு.க. அம்மா’ பெயரை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்தார். #TTVDhinakaran #ADMKAmma
கோத்தகிரி:
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் இன்று கோத்தகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய கட்சி தொடங்குவது உட்பட பல விஷயங்கள் பரிசீலனையில் உள்ளது. ‘அ.தி.மு.க. அம்மா’ பெயரை பயன்படுத்த அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்படும். இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்டெடுப்போம். சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் எங்களுடன் இணைவார்கள்.
ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றிபெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்ததால் மக்கள் என்னை வெற்றி பெற செய்தனர்.
அ.தி.மு.க.வின் குழப்பத்திற்கு, மத்திய அரசு தான் காரணம். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் போது ஸ்லீப்பர் செல்கள் வெளியேறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMKAmma #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X