search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரைவரை திருமணம் செய்த ஐ.ஏ.எஸ். மாணவி போலீஸ் கமி‌ஷனரிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
    X

    டிரைவரை திருமணம் செய்த ஐ.ஏ.எஸ். மாணவி போலீஸ் கமி‌ஷனரிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

    ஐ.ஏ.எஸ். மாணவி வீட்டை விட்டு வெளியேறி டிரைவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் பாதுகாப்பு கேட்டு கோவை போலீஸ் கமி‌ஷனரிடம் இன்று தஞ்சம் அடைந்தனர்.
    கோவை:

    குமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் நகரை சேர்ந்தவர் பிளசி(வயது 21). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் தற்போது ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து வருகிறார். இவரும், கட்டையன்விளையை சேர்ந்த டிரைவர் நிது(28) என்பவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் பிளசி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் கடந்த 29-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர். பின்னர் நண்பர்கள் உதவியுடன் போத்தனூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    புதுமண தம்பதிகள் நிது - பிளசி ஆகியோர் கோவை போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யாவை சந்தித்து பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். அதில் பிளசி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். தற்போது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலைபார்க்கும் பிளசியின் உறவினர் ஒருவர் தங்களது நண்பர்களை மிரட்டுவதாகவும், எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தனர்.
    Next Story
    ×