என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நாளை வருகிறது மத்திய குழு
Byமாலை மலர்12 Oct 2017 3:40 PM GMT (Updated: 12 Oct 2017 3:40 PM GMT)
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதார குழு நாளை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளது. போர்க்கால அடிப்படையில் உரிய பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் பேசுகையில், டெங்கு பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய தமிழகத்துக்கு மத்திய குழு வர இருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசின் மருத்துவ குழுவை தமிழகத்துக்கு அனுப்பி என்னென்ன தேவை என்பதை கண்டறிய பிரதமர் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக பன்னீர் செல்வம் கூறினார்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்புக்கள் குறித்து 5 மருத்துவர்களை கொண்ட வல்லுநர் குழு நாளை ஆய்வு செய்கிறது. இன்று சென்னை வரும் மத்திய குழு சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்கிறது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. சுகாதாரத் துறை செயலாளர் சிகே மிஸ்ரா பேசுகையில், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நிலவும் நிலையை ஆய்வு செய்யவும், நிலையை எதிர்க்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யவும் மாநில அரசுக்கு உதவி செய்ய டாக்டர்கள் குழு அனுப்பட்டு உள்ளது” என கூறியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளது. போர்க்கால அடிப்படையில் உரிய பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களிடம் பேசுகையில், டெங்கு பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய தமிழகத்துக்கு மத்திய குழு வர இருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசின் மருத்துவ குழுவை தமிழகத்துக்கு அனுப்பி என்னென்ன தேவை என்பதை கண்டறிய பிரதமர் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக பன்னீர் செல்வம் கூறினார்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்புக்கள் குறித்து 5 மருத்துவர்களை கொண்ட வல்லுநர் குழு நாளை ஆய்வு செய்கிறது. இன்று சென்னை வரும் மத்திய குழு சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்கிறது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. சுகாதாரத் துறை செயலாளர் சிகே மிஸ்ரா பேசுகையில், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நிலவும் நிலையை ஆய்வு செய்யவும், நிலையை எதிர்க்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யவும் மாநில அரசுக்கு உதவி செய்ய டாக்டர்கள் குழு அனுப்பட்டு உள்ளது” என கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X