search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களுரு எப்.சி.யை வீழ்த்தியது சென்னையின் எப்.சி.
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களுரு எப்.சி.யை வீழ்த்தியது சென்னையின் எப்.சி.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, பெங்களுரு எப்.சி.யை 2-1 என வீழ்த்தி வெற்றி பெற்றது.

    பெங்களுரு:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களுருவில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 26-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி., பெங்களுரு எப்.சி. அணியை எதிர்கொண்டது.

    இப்போட்டி தொடங்குவதற்கு முன்னர், சென்னையின் எப்.சி. அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்வியுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது. பெங்களுரு எப்.சி. அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய போட்டியின் 7-வது நிமிடத்தில் சென்னையின் ஜேஜே கோல் அடித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 85-வது நிமிடம் பெங்களுருவின் சுனில் செத்ரி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனானது. அதன்பின் இரு அணியினரும் தீவிரமாக கோல் அடிக்க முயற்சித்தனர். 



    இறுதிநேர ஆட்டத்தின் 88-வது நிமிடம் சென்னை அணியின் தனபால் கணேஷ் கோல் அடித்தார். இந்த கோல் சென்னை அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இதனால் 2-1 என்ற கோல்கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது.

    தனபால் கணேஷ்

    தற்போது மும்பையில் நடைபெற்றுவரும் லீக் போட்டியில் மும்பை சிட்டி எப்.சி - அதெலிடிகோ டீ கொல்கத்தா எப்.சி. அணிகள் விளையாடி வருகின்றன.
    Next Story
    ×