என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குத்துச்சண்டை போட்டி: விஜேந்தரை நாக்-அவுட் செய்வேன் - கானா வீரர் சவால்
Byமாலை மலர்16 Dec 2017 5:19 AM GMT (Updated: 16 Dec 2017 5:19 AM GMT)
ஜெய்ப்பூரில் 23-ம் தேதி நடக்க இருக்கும் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர்சிங்கை நாக் அவுட் செய்து வெளியேற்றுவேன் என கானா வீரர் எர்னெஸ்ட் அமுஜூ கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர்:
இந்திய தொழில்முறை குத்துச்சண்டை முன்னணி வீரர் விஜேந்தர்சிங் இதுவரை விளையாடியுள்ள 9 பந்தயங்களிலும் வெற்றி பெற்றிருப்பதுடன் டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் மற்றும் ஆசிய பசிபிக் பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் விஜேந்தர்சிங் தனது 10-வது தொழில்முறை குத்துச்சண்டையில் கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன் மல்லுகட்ட இருக்கிறார். இந்த பந்தயம் வருகிற 23-ந்தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது. 34 வயதான எர்னெஸ்ட் அமுஜூ 25 போட்டிகளில் விளையாடி 23-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டவர்.
எர்னெஸ்ட் அமுஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘விஜேந்தர் சிங்கின் பெயரை இப்போது தான் கேள்விப்படுகிறேன். அவரது குத்துச்சண்டையை நான் ஒரு போதும் பார்த்தது கிடையாது. இந்த போட்டிக்காக தினமும் 8 முதல் 10 மணி நேரம் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். களத்தில் விஜேந்தர் எத்தகைய தாக்குதல் தொடுத்தாலும், அதற்கு ஏற்ப நான் ஆயத்தமாக இருப்பேன்.
விஜேந்தர் முதல் தோல்வியை சந்திக்கப் போகிறார். அவரை, அவரது சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் நொறுக்கப்போகிறேன். முதலில், அவரது உடல் தளர்வடையும் வரை சரமாரியான குத்துகளை விடுவேன். அதன் பிறகு ‘நாக்-அவுட்’ செய்து வெளியேற்றுவேன். விஜேந்தருக்கு, என்னை போன்ற வலுவான எதிராளியை சந்தித்த அனுபவம் இதுவரை கிடையாது. இந்த பந்தயத்தின் போது இதை அவர் உணருவார். 3 அல்லது 4-வது ரவுண்டிலேயே அவர் வீழ்வது உறுதி’ என்றார்.
இந்திய தொழில்முறை குத்துச்சண்டை முன்னணி வீரர் விஜேந்தர்சிங் இதுவரை விளையாடியுள்ள 9 பந்தயங்களிலும் வெற்றி பெற்றிருப்பதுடன் டபிள்யூ.பி.ஓ. ஒரியன்டல் மற்றும் ஆசிய பசிபிக் பட்டங்களையும் கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் விஜேந்தர்சிங் தனது 10-வது தொழில்முறை குத்துச்சண்டையில் கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவுடன் மல்லுகட்ட இருக்கிறார். இந்த பந்தயம் வருகிற 23-ந்தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது. 34 வயதான எர்னெஸ்ட் அமுஜூ 25 போட்டிகளில் விளையாடி 23-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டவர்.
எர்னெஸ்ட் அமுஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘விஜேந்தர் சிங்கின் பெயரை இப்போது தான் கேள்விப்படுகிறேன். அவரது குத்துச்சண்டையை நான் ஒரு போதும் பார்த்தது கிடையாது. இந்த போட்டிக்காக தினமும் 8 முதல் 10 மணி நேரம் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். களத்தில் விஜேந்தர் எத்தகைய தாக்குதல் தொடுத்தாலும், அதற்கு ஏற்ப நான் ஆயத்தமாக இருப்பேன்.
விஜேந்தர் முதல் தோல்வியை சந்திக்கப் போகிறார். அவரை, அவரது சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் நொறுக்கப்போகிறேன். முதலில், அவரது உடல் தளர்வடையும் வரை சரமாரியான குத்துகளை விடுவேன். அதன் பிறகு ‘நாக்-அவுட்’ செய்து வெளியேற்றுவேன். விஜேந்தருக்கு, என்னை போன்ற வலுவான எதிராளியை சந்தித்த அனுபவம் இதுவரை கிடையாது. இந்த பந்தயத்தின் போது இதை அவர் உணருவார். 3 அல்லது 4-வது ரவுண்டிலேயே அவர் வீழ்வது உறுதி’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X