என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேவாக்கிற்கு தலைகீழாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சச்சின்: இணையத்தில் வைரலாகும் உல்டா டுவிட்
Byமாலை மலர்21 Oct 2017 4:15 AM GMT (Updated: 21 Oct 2017 4:15 AM GMT)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான சேவாக்கிற்கு, சச்சின் டெண்டுல்கர் தலைகீழாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் முன்னணி இடத்தை பிடித்திருந்தவர் சேவாக். தொடக்க வீரராக களமிறங்கும் அவர், எதிரணி பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தும் வகையில் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவார். சேவாக்குடன் துவக்க வீரராக களமிறங்கிய சச்சின், அவருக்கு அவ்வப்போது சில டிப்ஸ்களை வழங்குவார். ஆனால், சரி என்று தலையாட்டிவிட்டு செல்லும் சேவாக், தனது பாணியில்தான் ஆட்டத்தை தொடர்வார். எனினும் இந்த ஜோடி, இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்தது.
தற்போது ஓய்வு பெற்றுள்ள சேவாக், நேற்று தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனால், அவருடன் துவக்க வீரராக விளையாடிய சச்சின் சற்று வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து செய்தியை தலைகீழாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீரு. இந்த புதிய வருடம் உங்களுக்கு மிகச் சிறந்த துவக்கத்தை அளிக்கட்டும். ஆடுகளத்தில் இருக்கும்போது நான் என்ன செய்யச் சொன்னாலும், எப்போதும் உல்டாவாக செய்வாய். அதனால், இந்த பதிவு” என கூறியுள்ளார்.
சச்சின் பதிவு செய்துள்ள இந்த உல்டா டுவிட், ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் முன்னணி இடத்தை பிடித்திருந்தவர் சேவாக். தொடக்க வீரராக களமிறங்கும் அவர், எதிரணி பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தும் வகையில் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுவார். சேவாக்குடன் துவக்க வீரராக களமிறங்கிய சச்சின், அவருக்கு அவ்வப்போது சில டிப்ஸ்களை வழங்குவார். ஆனால், சரி என்று தலையாட்டிவிட்டு செல்லும் சேவாக், தனது பாணியில்தான் ஆட்டத்தை தொடர்வார். எனினும் இந்த ஜோடி, இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்தது.
தற்போது ஓய்வு பெற்றுள்ள சேவாக், நேற்று தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனால், அவருடன் துவக்க வீரராக விளையாடிய சச்சின் சற்று வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து செய்தியை தலைகீழாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீரு. இந்த புதிய வருடம் உங்களுக்கு மிகச் சிறந்த துவக்கத்தை அளிக்கட்டும். ஆடுகளத்தில் இருக்கும்போது நான் என்ன செய்யச் சொன்னாலும், எப்போதும் உல்டாவாக செய்வாய். அதனால், இந்த பதிவு” என கூறியுள்ளார்.
சச்சின் பதிவு செய்துள்ள இந்த உல்டா டுவிட், ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X