என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி லீக் போட்டி: தமிழ் தலைவாஸ்-உ.பி. இன்று மோதல்
Byமாலை மலர்4 Oct 2017 6:49 AM GMT (Updated: 4 Oct 2017 6:49 AM GMT)
புரோ கபடி லீக்கில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- உ.பி. யோதா அணிகள் மோதுகின்றன.
சென்னை:
5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 10-வது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள மும்பை- அரியானா அணிகள் மோதுகின்றன.
சுரேந்தர் நாடா தலைமையிலான அரியானா அணி 18 ஆட்டத்தில் விளையாடி 9 வெற்றி, 5 தோல்வி, 4 டையுடன் 59 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மும்பையை வீழ்த்தி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.
மும்பையுடன் அந்த அணி 2 முறை தோற்று உள்ளது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் அரியானா பதிலை கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணி 10 வெற்றி, 8 தோல்வியுடன் 54 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி அரியானாவை 3-வது முறையாக வீழ்த்தி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.
இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ்- உ.பி. யோதா அணிகள் மோதுகின்றன.
அஜய் தாக்கூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் 17 ஆட்டத்தில் 4 வெற்றி, 11 தோல்வி, 2டையுடன் 34 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
சொந்த மண்ணான சென்னையில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோற்றது. ரசிகர்களுக்காகவாவது தமிழ் தலைவாஸ் வீரர்கள் சென்னையில் நடைபெறும் எஞ்சிய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும். உ.பி. அணியுடன் ஏற்கனவே ஒரு முறை வென்றது. மற்றொரு முறை ‘டை’ செய்தது.
நிதின் தோமர் தலைமையிலான உ.பி. யோதா 6 வெற்றி, 8 தோல்வி, 4 டையுடன் 49 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தமிழ் தலைவாஸ் அணிக்கு பதிலடி கொடுத்து 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
5-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் 10-வது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள மும்பை- அரியானா அணிகள் மோதுகின்றன.
சுரேந்தர் நாடா தலைமையிலான அரியானா அணி 18 ஆட்டத்தில் விளையாடி 9 வெற்றி, 5 தோல்வி, 4 டையுடன் 59 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி மும்பையை வீழ்த்தி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.
மும்பையுடன் அந்த அணி 2 முறை தோற்று உள்ளது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் அரியானா பதிலை கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணி 10 வெற்றி, 8 தோல்வியுடன் 54 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி அரியானாவை 3-வது முறையாக வீழ்த்தி 11-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.
இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ்- உ.பி. யோதா அணிகள் மோதுகின்றன.
அஜய் தாக்கூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் 17 ஆட்டத்தில் 4 வெற்றி, 11 தோல்வி, 2டையுடன் 34 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
சொந்த மண்ணான சென்னையில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோற்றது. ரசிகர்களுக்காகவாவது தமிழ் தலைவாஸ் வீரர்கள் சென்னையில் நடைபெறும் எஞ்சிய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும். உ.பி. அணியுடன் ஏற்கனவே ஒரு முறை வென்றது. மற்றொரு முறை ‘டை’ செய்தது.
நிதின் தோமர் தலைமையிலான உ.பி. யோதா 6 வெற்றி, 8 தோல்வி, 4 டையுடன் 49 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தமிழ் தலைவாஸ் அணிக்கு பதிலடி கொடுத்து 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X