என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கைவிரல் முறிவு: நாடு திரும்புகிறார் ஆஸி. சுழற்பந்து வீச்சாளர்
Byமாலை மலர்25 Sep 2017 11:23 AM GMT (Updated: 25 Sep 2017 11:23 AM GMT)
இந்தூரில் நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான 3-வது போட்டியில் பீல்டிங் செய்யும்போது காயம் அடைந்த ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் சொந்த நாடு திரும்புகிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. அப்போது பவுண்டரி கோடு அருகில் பீல்டிங் செய்த சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரின் வலது கையின் சுண்டு விரலில் முறிவு ஏற்பட்டது.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பதால் நேற்றைய போட்டியில் தொடர்ந்து பந்து வீசினார். ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்ததால், மீதமுள்ள இரண்டு போடடிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படவில்லை. இதனால் ஆஷ்டன் அகர் சொந்த நாடு திரும்புகிறார்.
‘‘நேற்றைய போட்டி முடிந்த பின்னர் எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது அவரது கைவிரலில் முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக ஆஸ்திரேலியா செல்லும் ஆஷ்டன் அகர், வல்லுனர்களுடன் ஆலோசனைப் பெறுகிறார். பெரும்பாலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வாய்ப்புள்ளது’’ என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆஷ்டன் அகருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது போட்டி வரும் 28-ந்தேதி பெங்களூருவிலும், 5-வது போட்டி அக்டோபர் 1-ந்தேதி நாக்பூரிலும் நடக்கிறது.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பதால் நேற்றைய போட்டியில் தொடர்ந்து பந்து வீசினார். ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்ததால், மீதமுள்ள இரண்டு போடடிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படவில்லை. இதனால் ஆஷ்டன் அகர் சொந்த நாடு திரும்புகிறார்.
‘‘நேற்றைய போட்டி முடிந்த பின்னர் எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது அவரது கைவிரலில் முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக ஆஸ்திரேலியா செல்லும் ஆஷ்டன் அகர், வல்லுனர்களுடன் ஆலோசனைப் பெறுகிறார். பெரும்பாலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வாய்ப்புள்ளது’’ என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆஷ்டன் அகருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது போட்டி வரும் 28-ந்தேதி பெங்களூருவிலும், 5-வது போட்டி அக்டோபர் 1-ந்தேதி நாக்பூரிலும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X