என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பார்சிலோனாவில் இருந்து வெளியேறும் நெய்மருக்கு மெஸ்சி பிரியாவிடை செய்தி
Byமாலை மலர்3 Aug 2017 12:34 PM GMT (Updated: 3 Aug 2017 12:34 PM GMT)
பார்சிலோனாவில் இருந்து வெளியேறும் நெய்மருக்கு, மெஸ்சி வீடியோ மூலம் பிரியாவிடை செய்தி அனுப்பியுள்ளார்.
பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருபவர் நெய்மர். இவரை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். மெஸ்சி, சுவாரஸ் மற்றும் நெய்மர் ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் பார்சிலோனா வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வருகிறது.
மெஸ்சி மற்றும் சுவாரஸ் ஆகியோர் கோல் அடிக்க நெய்மரின் ஆட்டம் உறுதுணையாக இருக்கும். சிறந்த வீரரான நெய்மரை மற்ற அணிகள் பலகோடி ரூபாய் கொடுத்து வாங்க தயாராக இருந்தது. கடந்த வருடமே மற்ற அணிகளுடன் ஏஜென்ட் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் பார்சிலோனா அணி, நெய்மருடன் புதிய ஓப்பந்தம் போட்டது. அதன்படி 2021-ம் ஆண்டு வரை பார்சிலோனா அணிக்காக விளையாடுவேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், இந்த வருடம் தற்போது டிரான்ஸ்பர் பணி நடந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டின் முன்னணி கிளப்பான பாரிஸ் செயன்ட்-ஜெர்மைன், நெய்மரை வாங்க ஆசைப்பட்டது. நெய்மருக்கு அதிக அளவில் சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை கூறியது. இதனால் நெய்மர் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பார்சிலோனா அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னுடன் விளையாடி வந்த நெய்மர் அணியில் இருந்து பிரிந்து செல்வது மெஸ்சிக்கு கடினமாக உள்ளது. அவருக்கு வீடியோ மூலம் பிரியாவிடை செய்தி அனுப்பியுள்ளார். அந்த செய்தியில் ‘‘நண்பா நெய்மர், உன்னுடன் விளையாடிய வருடங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதிக அதிர்ஷ்டம் பெற்று உன்னுடைய வாழ்க்கை அடுத்த நிலைக்கு உயர வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்’’ என தெரிவித்துள்ளார்.
மெஸ்சி மற்றும் சுவாரஸ் ஆகியோர் கோல் அடிக்க நெய்மரின் ஆட்டம் உறுதுணையாக இருக்கும். சிறந்த வீரரான நெய்மரை மற்ற அணிகள் பலகோடி ரூபாய் கொடுத்து வாங்க தயாராக இருந்தது. கடந்த வருடமே மற்ற அணிகளுடன் ஏஜென்ட் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் பார்சிலோனா அணி, நெய்மருடன் புதிய ஓப்பந்தம் போட்டது. அதன்படி 2021-ம் ஆண்டு வரை பார்சிலோனா அணிக்காக விளையாடுவேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், இந்த வருடம் தற்போது டிரான்ஸ்பர் பணி நடந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டின் முன்னணி கிளப்பான பாரிஸ் செயன்ட்-ஜெர்மைன், நெய்மரை வாங்க ஆசைப்பட்டது. நெய்மருக்கு அதிக அளவில் சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை கூறியது. இதனால் நெய்மர் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பார்சிலோனா அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னுடன் விளையாடி வந்த நெய்மர் அணியில் இருந்து பிரிந்து செல்வது மெஸ்சிக்கு கடினமாக உள்ளது. அவருக்கு வீடியோ மூலம் பிரியாவிடை செய்தி அனுப்பியுள்ளார். அந்த செய்தியில் ‘‘நண்பா நெய்மர், உன்னுடன் விளையாடிய வருடங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதிக அதிர்ஷ்டம் பெற்று உன்னுடைய வாழ்க்கை அடுத்த நிலைக்கு உயர வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்’’ என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X