search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையினால் ஆட்டம் நிறுத்தம்; இந்தியா 38 ஓவரில் 189/3
    X

    மழையினால் ஆட்டம் நிறுத்தம்; இந்தியா 38 ஓவரில் 189/3

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 38 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டுள்ளது.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ட்ரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் ரகானே, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர்.

    இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25 ஓவரில் 132 ரன்கள் சேர்த்தனர். ரகானே 62 ரன்னிலும், தவான் 87 ரன்னிலும் ஆட்டம் இழந்தார்.


    அரைசதம் அடித்த ரகானே

    அடுத்து விராட் கோலியும், யுவராஜ் சிங்கும் களம் இறங்கினார்கள். யுவராஜ் சிங் 10 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார்.

    இந்தியா 38 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. விராட் கோலி 30 ரன்னுடனும், டோனி 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×