என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்து கோப்பையை வெல்லும் - லாரா
Byமாலை மலர்27 May 2017 8:18 AM GMT (Updated: 27 May 2017 8:18 AM GMT)
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.
லண்டன்:
மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் உலகின் ‘டாப் 8’ நாடுகள் பங்கேற்கின்றன.
இந்தப்போட்டியில் இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இதுவரை நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியை விட இந்த முறை மிகவும் பரபரப்பாக இருக்கும். ஏனென்றால் அனைத்து அணிகளும் மிகவும் நல்ல நிலையில் உள்ளன.
சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்கு கூடுதல் பலமாகும். என்னை பொறுத்தவரை இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அணி 20 ஓவர் உலககோப்பையை இறுதிப்போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் தோற்று கோப்பையை இழந்து இருந்தது. ஆனால் தற்போது அந்த அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர்.
போத்தம், பிளின்டாப் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தவர்கள். ஆனால் தற்போது ஒட்டு மொத்த இங்கிலாந்து அணியிலும் அபாரமாக ஆடக்கூடிய வீரர்கள் உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் வியக்கதக்க வீரர்கள் உள்ளனர்.
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சாம்பியன்ஸ் டிராபியை (2004) வென்றது மறக்க இயலாது. தற்போதுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி தரவரிசை காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.
இவ்வாறு லாரா கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி இதுவரை சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இல்லை. 2004-ல் வெஸ்ட் இண்டீசிடமும், 2013-ல் இந்தியாவிடம் தோற்று அந்த அணி கோப்பையை இழந்து இருந்தது.
மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் உலகின் ‘டாப் 8’ நாடுகள் பங்கேற்கின்றன.
இந்தப்போட்டியில் இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இதுவரை நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியை விட இந்த முறை மிகவும் பரபரப்பாக இருக்கும். ஏனென்றால் அனைத்து அணிகளும் மிகவும் நல்ல நிலையில் உள்ளன.
சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்கு கூடுதல் பலமாகும். என்னை பொறுத்தவரை இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அணி 20 ஓவர் உலககோப்பையை இறுதிப்போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் தோற்று கோப்பையை இழந்து இருந்தது. ஆனால் தற்போது அந்த அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர்.
போத்தம், பிளின்டாப் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தவர்கள். ஆனால் தற்போது ஒட்டு மொத்த இங்கிலாந்து அணியிலும் அபாரமாக ஆடக்கூடிய வீரர்கள் உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் வியக்கதக்க வீரர்கள் உள்ளனர்.
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சாம்பியன்ஸ் டிராபியை (2004) வென்றது மறக்க இயலாது. தற்போதுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி தரவரிசை காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.
இவ்வாறு லாரா கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி இதுவரை சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இல்லை. 2004-ல் வெஸ்ட் இண்டீசிடமும், 2013-ல் இந்தியாவிடம் தோற்று அந்த அணி கோப்பையை இழந்து இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X