என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல். சம்பளம் குறைவு- மெக்கல்லம்; வர்ணனைக்கு வந்து விடுங்கள்- கெவின் பீட்டர்சன்
Byமாலை மலர்19 May 2017 11:36 AM GMT (Updated: 19 May 2017 11:36 AM GMT)
ஐ.பி.எல். தொடரில் என்னுடைய சம்பளம் ஏழரை கோடி ரூபாய் கிடையாது என மெக்கல்லம் விவரித்துள்ளார். குறைவு என்றால் வர்ணனைக்கு வாருங்கள் என பீட்டர்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் பிராண்டன் மெக்கல்லம். தனது அதிரடியால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், டி20 லீக் ஆட்டங்களில் விளையாடி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடரில் மெக்கல்லம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். அந்த அணிக்கு தடை விதித்ததால் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த சீசனில சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர் முழுவதும் அவரால் விளையாட முடியாமல் போனது.
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக பிராண்டன் மெக்கல்லம் சுமார் ஏழரை கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று நியூசிலாந்து இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், பிராண்டன் மெக்கல்லம் இதை மறுத்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது ஏழரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன். தற்போது அதில் பாதியான சுமார் 3.75 கோடி ரூபாய்தான் வாங்குகிறேன். என்னுடைய சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் டுவிட் செய்துள்ள கெவின் பீட்டர்சன், ‘‘கஷ்டப்பட்டு விளையாடி இவ்வளவு சம்பளம் வாங்குவதை விட, எங்களுடன் வர்ணனை செய்ய வந்து விடுங்கள். அதை விட அதிக அளவில சம்பாதிக்கலாம்’’ என்று ஜாலியாக கூறியுள்ளார். அதற்கு மெக்கல்லமும் ‘வர்ணனை செய்ய வருகிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, இருவருக்கும் இடையிலான சுவாரஸ்யமான டுவிட்டர் உரையாடல் சிறிது நேரம் நீடித்தது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடரில் மெக்கல்லம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். அந்த அணிக்கு தடை விதித்ததால் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த சீசனில சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர் முழுவதும் அவரால் விளையாட முடியாமல் போனது.
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக பிராண்டன் மெக்கல்லம் சுமார் ஏழரை கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று நியூசிலாந்து இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், பிராண்டன் மெக்கல்லம் இதை மறுத்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது ஏழரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன். தற்போது அதில் பாதியான சுமார் 3.75 கோடி ரூபாய்தான் வாங்குகிறேன். என்னுடைய சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் டுவிட் செய்துள்ள கெவின் பீட்டர்சன், ‘‘கஷ்டப்பட்டு விளையாடி இவ்வளவு சம்பளம் வாங்குவதை விட, எங்களுடன் வர்ணனை செய்ய வந்து விடுங்கள். அதை விட அதிக அளவில சம்பாதிக்கலாம்’’ என்று ஜாலியாக கூறியுள்ளார். அதற்கு மெக்கல்லமும் ‘வர்ணனை செய்ய வருகிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, இருவருக்கும் இடையிலான சுவாரஸ்யமான டுவிட்டர் உரையாடல் சிறிது நேரம் நீடித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X