search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகம்: தாக்குதல் நடத்தும் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த கமிஷனர் அனுமதி
    X

    கர்நாடகம்: தாக்குதல் நடத்தும் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த கமிஷனர் அனுமதி

    கர்நாடகம் மாநிலத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்த வரும் ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தலாம் என கமிஷனர் அனுமதி அளித்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் கொடிகேஹல்லி, படயனபுரா உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து சென்ற போலீசார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் சிலர் காயமடைந்ததுடன், அவர்களது வாகனங்களும் சேதமடைந்தன.

    இந்நிலையில், பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த சில நாட்களாக இரவு ரோந்து செல்லும் போலீசார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுபோன்ற செயல்கள் நடப்பதை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பணியில் ஈடுபட்டுள்ள தங்கள் மீது தாக்குதல் நடத்த வரும் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளேன். மேலும், இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    Next Story
    ×