என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி சட்டசபையில் இருந்து கபில் மிஸ்ரா மீண்டும் வெளியேற்றம்
Byமாலை மலர்17 Jan 2018 10:03 AM GMT (Updated: 17 Jan 2018 10:03 AM GMT)
டெல்லி சட்டசபையில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. கபில் மிஸ்ரா மீண்டும் வெளியேற்றப்பட்டார்.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபையின் மூன்று நாள் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. கபில் மிஸ்ரா, கட்சி தலைமைக்கு எதிராக தொடர்ந்து அமளியை ஏற்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மூன்று இடங்களை விற்பனை செய்துள்ளதாகவும், அதுதொடர்பாக சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று சட்டசபையில் கோஷம் எழுப்பினார். கட்சியை விமர்சிக்கும் வகையிலான போஸ்டரும் கொண்டு வந்திருந்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், சபைக்குள் போஸ்டர் கொண்டு வந்ததற்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவரை வெளியேற்றும்படி உத்தரவிட்டார். இதனால் அவரை சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.
அதேபோல் இன்றும் சட்டசபையில் கபில் மிஸ்ரா பிரச்சினை எழுப்பினார். சபையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டதால் அவரை வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X