search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெற்கு காஷ்மீரில் கண்ணி வெடி மறைத்து வைக்கும் பணியில் ஈடுபட்ட தீவிரவாதி பலி
    X

    தெற்கு காஷ்மீரில் கண்ணி வெடி மறைத்து வைக்கும் பணியில் ஈடுபட்ட தீவிரவாதி பலி

    தெற்கு காஷ்மீரில் கன்னி வெடியை புதைத்து வைத்து வெடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வெளிநாட்டு தீவிரவாதி வெடி விபத்தில் பலியானான்.
    ஸ்ரீநகர்:

    தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இருந்து சுமார் 35 கி.மீட்டர் தொலைவில் உள்ள இடம் ட்ரால். இங்கு வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் இறந்து கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்படி ஜம்மு - காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது பலியான தீவிரவாதி ஜெய்ஷ்-இ-மொமது பிரிவைச் சேர்ந்த வெளிநாட்டு தீவிரவாதி என்பதை உறுதி செய்தனர். மேலும், கண்ணி வெடியை புதைத்து வைத்து விபத்தை ஏற்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது கண்ணி வெடி விடித்து இறந்ததாக தெரிவித்துனர்.

    வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதி கண்ணி வெடி புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், தாக்குதல் நடத்த திட்டம் தீட்டினார்களா? என்ற அடிப்படையில் பாதுகாப்புப்படையினர் அப்பகுதியில் தீவர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×