என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்: ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
Byமாலை மலர்15 Dec 2017 10:10 PM GMT (Updated: 15 Dec 2017 10:10 PM GMT)
தமிழ்நாட்டில் உடன்குடியில் ரூ.7,300 கோடி செலவில் 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கான பணி ஆணையை ‘பெல்’ நிறுவனம் பெற்றது.
புதுடெல்லி:
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அதிநவீன மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது. இது, ரூ.7 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டம் ஆகும்.
தலா 660 மெகாவாட் வீதம் மொத்தம் 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 2 அதிநவீன அனல் மின் நிலையங்கள் அங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கான பணி ஆணையை பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘பெல்’ நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இதுபோன்ற அதிநவீன மின் உற்பத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை ‘பெல்’ நிறுவனத்திடம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்குவது, கடந்த 3 ஆண்டுகளில் இது 4-வது முறை ஆகும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, உடன்குடியில், தலா 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 2 அதிநவீன அனல் மின் நிலையங்களை ‘பெல்’ நிறுவனம் அமைக்கும். என்ஜினீயரிங், கொள்முதல், கட்டுமானம் (இ.பி.சி.) அடிப்படையில், இந்த திட்டத்தை நிறைவேற்றும்.
இந்த திட்டம், தமிழ்நாடு வளர்ச்சி அடைவதற்கு துணைபுரிவதுடன், தமிழக மக்களுக்கு எளிதில் மின்சாரம் கிடைப்பதற்கு பேருதவியாக அமையும் என்று கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அதிநவீன மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது. இது, ரூ.7 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டம் ஆகும்.
தலா 660 மெகாவாட் வீதம் மொத்தம் 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 2 அதிநவீன அனல் மின் நிலையங்கள் அங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கான பணி ஆணையை பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘பெல்’ நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இதுபோன்ற அதிநவீன மின் உற்பத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை ‘பெல்’ நிறுவனத்திடம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்குவது, கடந்த 3 ஆண்டுகளில் இது 4-வது முறை ஆகும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, உடன்குடியில், தலா 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 2 அதிநவீன அனல் மின் நிலையங்களை ‘பெல்’ நிறுவனம் அமைக்கும். என்ஜினீயரிங், கொள்முதல், கட்டுமானம் (இ.பி.சி.) அடிப்படையில், இந்த திட்டத்தை நிறைவேற்றும்.
இந்த திட்டம், தமிழ்நாடு வளர்ச்சி அடைவதற்கு துணைபுரிவதுடன், தமிழக மக்களுக்கு எளிதில் மின்சாரம் கிடைப்பதற்கு பேருதவியாக அமையும் என்று கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X