என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அறுவை சிகிச்சை மூலம் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரிப்பு
Byமாலை மலர்13 Dec 2017 10:45 PM GMT (Updated: 13 Dec 2017 10:45 PM GMT)
ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் 12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் தனித்தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன
மும்பை:
மும்பை காட்கோபரை சேர்ந்தவர் ஷீத்தல். இவர் கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்தார். 24 வார கர்ப்ப காலத்தின்போது, ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் ஒட்டி வளர்வது தெரியவந்தது. இருப்பினும் குழந்தையை பெற்றெடுக்க ஷீத்தல் மற்றும் அவரது கணவர் முடிவெடுத்தனர்.
கடந்த ஆண்டு பரேலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷீத்தலுக்கு பிரசவம் ஆனது. அப்போது, வயிறு மற்றும் இடுப்பு பகுதி ஒட்டிய நிலையில் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இதனையடுத்து ஒட்டிப்பிறந்த 2 குழந்தைகளையும் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க டாக்டர்கள் முடிவு செய்திருந்தனர். இதன்படி அந்த குழந்தைகள் பிறந்து ஒரு ஆண்டுக்கு பின் நேற்றுமுன்தினம் அந்த தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை 20 டாக்டர்கள் குழுவினர் மேற்கொண்டனர்.
12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் 2 குழந்தைகளும் தனித்தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன.அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாக அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
மும்பை காட்கோபரை சேர்ந்தவர் ஷீத்தல். இவர் கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்தார். 24 வார கர்ப்ப காலத்தின்போது, ஸ்கேன் பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் ஒட்டி வளர்வது தெரியவந்தது. இருப்பினும் குழந்தையை பெற்றெடுக்க ஷீத்தல் மற்றும் அவரது கணவர் முடிவெடுத்தனர்.
கடந்த ஆண்டு பரேலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷீத்தலுக்கு பிரசவம் ஆனது. அப்போது, வயிறு மற்றும் இடுப்பு பகுதி ஒட்டிய நிலையில் 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இதனையடுத்து ஒட்டிப்பிறந்த 2 குழந்தைகளையும் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க டாக்டர்கள் முடிவு செய்திருந்தனர். இதன்படி அந்த குழந்தைகள் பிறந்து ஒரு ஆண்டுக்கு பின் நேற்றுமுன்தினம் அந்த தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை 20 டாக்டர்கள் குழுவினர் மேற்கொண்டனர்.
12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் 2 குழந்தைகளும் தனித்தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன.அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாக அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X