search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டில் தயார் செய்யப்பட்ட விமானத்தில் பயணம் செய்ய அனுமதி
    X

    வீட்டில் தயார் செய்யப்பட்ட விமானத்தில் பயணம் செய்ய அனுமதி

    மும்பையைச் சேர்ந்த அமோல் யாதவ் 4 கோடி செலவில் வீட்டு மொட்டை மாடியில் தாயார் செய்த சிறிய ரக விமானத்தில் பயணம் செய்ய இந்திய விமான போக்குவரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
    மும்பை:

    மக்கள் நெரிசல் மிகுந்த இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள பெட்டி போன்ற அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விமானம் ஒன்றை தயாரிக்க போவதாக 7 ஆண்டுகளுக்கு முன்னரே அமோல் யாதவ் தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்தார். தனது சொந்த செலவில் கடந்து ஆறு ஆண்டுகளாக விமானம் ஒன்றை தனது வீட்டு மாடியில் தயாரித்தார்.


    கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவருடைய 6 இருக்கை கொண்ட விமானம் தயாராகிவிட்டது. இவ்வாறு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இதுபோன்ற முதல் விமானம், இதுதான்.இதனுடைய எந்திரம் 13 ஆயிரம் கிலோமீட்டர் உயரம் வரை மேலெழுந்து பறக்கக்கூடியது சக்தியுடையது. அதனுடைய எரிசக்தி கலனில் மணிக்கு 185 கடல் மைல் வேகத்தில் பயணித்து 2 ஆயிரம் கிலோமீட்டர் பறக்க தேவையான எரிபொருளை நிரப்ப முடியும்.

    தன்னுடைய கனவை நனவாக்க அவர் தன்னுடைய மற்றும் அவருடைய குடும்பத்தினரின் 4 கோடி ரூபாய்  செலவிட்டுள்ளதோடு, சொத்துக்களை விற்றுள்ளார். குடும்ப அணிகலன்களை அடமானம் வைத்துள்ளார்.

    இந்நிலையில், விமானத்தை பதிவு செய்து  விமானத்தில் பயணம் செய்ய இந்திய விமான போக்குவரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அவருடைய விமானம் நரேந்திர மோடி மற்றும் மராட்டிய மாநிலம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. VT-NMD ( விக்டர் டங்கோ நரேந்திர மோடி தேவேந்திரா ) என்ற பெயரானது அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் சூட்டப்பட்டுள்ளதாக யாதவ் தெரிவித்தார்.


    விமானத்தை சோதனை செய்த போது பல பிரச்சனைகள் வந்தது. அப்போது பட்னாவிஸ் மிகுந்த உதவி செய்தார். அவர்கள் கொடுத்த நம்பிக்கையே என் வெற்றிக்கு காரணம் எனக் கூறினார்.

    Next Story
    ×