search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொருளாதார விவகாரம்: பிரதமருக்கு ஆலோசனை வழங்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு
    X

    பொருளாதார விவகாரம்: பிரதமருக்கு ஆலோசனை வழங்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு

    பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக 5 பேர் கொண்ட குழுவை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார்.
    புதுடெல்லி:

    நாட்டின் பொருளாதார நிலை சரிவை சந்தித்து வரும் நிலையில், பொருளாதார ஆலோசனைக் குழுவை பிரதமர் மோடி அமைத்துள்ளார். 5 பேர் கொண்ட இந்த பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக, நிதி ஆயோக் உறுப்பினரான பிபேக் தேவ்ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த குழுவில் சுர்ஜித் பாலா, ரத்தின் ராய் மற்றும் அஷீமா கோயல் ஆகியோர் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிதி ஆயோக் முதன்மை ஆலோசகர் ரத்தன் வாட்டல், குழுவின் உறுப்பினர்-செயலாளராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழுவானது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை பிரதமருக்கு இந்தக் குழு வழங்கும்.
    Next Story
    ×