என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் நிறுவனங்களில் வருமான வரி சோதனை
Byமாலை மலர்21 Sep 2017 10:12 AM GMT (Updated: 21 Sep 2017 10:12 AM GMT)
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி சித்தார்தா வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா. முன்னாள் மத்திய மந்திரியாகவும், கவர்னராகவும் இருந்துள்ளார்.
84 வயதான இவர் சமீபத்தில் தான் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்தார்.
எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி சித்தார்தா. இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியது.
பெங்களூர், சென்னை, மும்பை, சிக்மங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள அவரது நிறுவனங்களில் 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
கர்நாடகா மற்றும் கோவா மண்டலங்களை சேர்ந்த மூத்த வருமானவரி துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சித்தார்தா மீதான வரி எய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா என்ற விவரம் தெரியவில்லை.
சமீபத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் மந்திரி சிவக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது பாரதிய ஜனதாவில் கடந்த மார்ச் மாதம் இணைந்த எஸ்.எம். கிருஷ்ணாவின் உறவினர் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா. முன்னாள் மத்திய மந்திரியாகவும், கவர்னராகவும் இருந்துள்ளார்.
84 வயதான இவர் சமீபத்தில் தான் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்தார்.
எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி சித்தார்தா. இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியது.
பெங்களூர், சென்னை, மும்பை, சிக்மங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள அவரது நிறுவனங்களில் 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
கர்நாடகா மற்றும் கோவா மண்டலங்களை சேர்ந்த மூத்த வருமானவரி துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். காலை 8.45 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சித்தார்தா மீதான வரி எய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா என்ற விவரம் தெரியவில்லை.
சமீபத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் மந்திரி சிவக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது பாரதிய ஜனதாவில் கடந்த மார்ச் மாதம் இணைந்த எஸ்.எம். கிருஷ்ணாவின் உறவினர் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X