search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோரக்பூர்: தொடரும் குழந்தைகள் மரணம் - கடந்த 48 மணிநேரத்தில் 7 குழந்தைகள் பலி
    X

    கோரக்பூர்: தொடரும் குழந்தைகள் மரணம் - கடந்த 48 மணிநேரத்தில் 7 குழந்தைகள் பலி

    கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளையழற்சி நோய் காரணமாக கடந்த 48 மணிநேரத்தில் ஏழு குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் ஒரே வாரத்தில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    இந்நிலையில், கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் ஏழு குழந்தைகள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளனர். இந்த குழந்தைகள் மரணத்திற்கும் மூளையழற்சி நோயே காரணம் என மருத்துவமனைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மரண சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஒரே வாரத்தில் 70 குழந்தைகள் மரணமடைந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் ஏழு குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×