என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளத்தில் மூழ்கியுள்ள பள்ளிகள் - படகில் பாடம் பயிலும் மாணவர்கள்
Byமாலை மலர்24 Aug 2017 10:02 AM GMT (Updated: 24 Aug 2017 10:03 AM GMT)
அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் 23,000 பள்ளிகள் மூழ்கியுள்ளதால் படகின் மூலம் மாணவர்கள் பாடம் பயில்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திஸ்பூர்:
அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் கிட்டத்தட்ட 23,000 பள்ளிகள் மூழ்கியுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஜாய் என்ற தொண்டு நிறுவனம், பார்பேடா மாவட்டத்தில் மிதக்கும் படகுகள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறது.
அந்நிறுவனத்தின் ஊழியரான ஜாகிதுல் இஸ்லாம் இது குறித்து கூறுகையில், படகில் வகுப்பு எடுக்கும் முறையை 6 மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டோம். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் என தெரிவித்தார்.
மேலும், பல கிராமங்களில் உள்ள மாணவர்கள் வீடுகளிலிருந்து படகின் மூலம் அழைத்து வரப்பட்டு படகிலேயே பாடம் நடத்தப்படுகிறது. இவ்வகுப்பு 2 மணி நேரம் நடத்தப்படுகிறது.
இந்த வகுப்புகள் மூலம் மாணவர்கள் தங்கள் படிப்பை தடையின்றி தொடருவதாக அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் கிட்டத்தட்ட 23,000 பள்ளிகள் மூழ்கியுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஜாய் என்ற தொண்டு நிறுவனம், பார்பேடா மாவட்டத்தில் மிதக்கும் படகுகள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறது.
அந்நிறுவனத்தின் ஊழியரான ஜாகிதுல் இஸ்லாம் இது குறித்து கூறுகையில், படகில் வகுப்பு எடுக்கும் முறையை 6 மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டோம். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் என தெரிவித்தார்.
மேலும், பல கிராமங்களில் உள்ள மாணவர்கள் வீடுகளிலிருந்து படகின் மூலம் அழைத்து வரப்பட்டு படகிலேயே பாடம் நடத்தப்படுகிறது. இவ்வகுப்பு 2 மணி நேரம் நடத்தப்படுகிறது.
இந்த வகுப்புகள் மூலம் மாணவர்கள் தங்கள் படிப்பை தடையின்றி தொடருவதாக அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X