என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்கண்டில் பிரபல தொழில் அதிபர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்19 Aug 2017 7:06 PM GMT (Updated: 19 Aug 2017 7:06 PM GMT)
ஜார்கண்டில் பிரபல தொழில் அதிபர் திரன் ரவானி உறவினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்பாத்:
பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ‘ரெயின்போ குரூப்’ என்ற நிறுவனம், ஓட்டல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் திரன் ரவானி. ஜார்கண்டின் தன்பாத்தில் வசித்து வந்த இவர் பவ்ரா பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.
அப்போது அங்கே வந்த அவரது உறவினரான குணால் ரவானி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென திரன் ரவானியை நோக்கி சுட்டார். இதில் குண்டுபாய்ந்து சரிந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தன்பாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே திரன் ரவானியை சுட்டதும், குணால் ரவானி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை அருகில் உள்ளவர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சொத்து தகராறு காரணமாக திரன் ரவானி கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ‘ரெயின்போ குரூப்’ என்ற நிறுவனம், ஓட்டல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் திரன் ரவானி. ஜார்கண்டின் தன்பாத்தில் வசித்து வந்த இவர் பவ்ரா பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.
அப்போது அங்கே வந்த அவரது உறவினரான குணால் ரவானி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென திரன் ரவானியை நோக்கி சுட்டார். இதில் குண்டுபாய்ந்து சரிந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தன்பாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே திரன் ரவானியை சுட்டதும், குணால் ரவானி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை அருகில் உள்ளவர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சொத்து தகராறு காரணமாக திரன் ரவானி கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X