என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபர் கைது
Byமாலை மலர்18 Aug 2017 9:04 AM GMT (Updated: 18 Aug 2017 9:04 AM GMT)
புதுடெல்லி மெட்ரோ ரெயிலில் குடிபோதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி:
புதுடெல்லியில் கடந்த புதன் கிழமை மெட்ரோ ரெயிலில் பெண் ஒருவர் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். ரெயிலானது நொய்டாவிற்கும் அக்ஷர்தாம் ரெயில் நிலையத்திற்கும் இடையில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த நபர் குடிபோதையில் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பித்து வெளியே வந்த பிறகும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்துள்ளார்.
உடனே அந்த பெண் ரெயில் நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் அவர் பீகாரை சேர்ந்த மானு குமார்(வயது 40) என்பது தெரிய வந்தது. மேலும் குடிபோதையில் தவறு செய்ததாக மானு குமார் ஒப்புக் கொண்டுள்ளார்.
பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசியது, பலவந்தப்படுத்த முயன்றது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் மானு குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
புதுடெல்லியில் கடந்த புதன் கிழமை மெட்ரோ ரெயிலில் பெண் ஒருவர் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். ரெயிலானது நொய்டாவிற்கும் அக்ஷர்தாம் ரெயில் நிலையத்திற்கும் இடையில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த நபர் குடிபோதையில் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பித்து வெளியே வந்த பிறகும் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்துள்ளார்.
உடனே அந்த பெண் ரெயில் நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் அவர் பீகாரை சேர்ந்த மானு குமார்(வயது 40) என்பது தெரிய வந்தது. மேலும் குடிபோதையில் தவறு செய்ததாக மானு குமார் ஒப்புக் கொண்டுள்ளார்.
பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசியது, பலவந்தப்படுத்த முயன்றது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் மானு குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X