search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் - வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
    X

    சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் - வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

    உத்தரப்பிரேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட வாலிபருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கடோலி பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விக்கி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    விக்கி 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் வந்தது. இதனால் குழந்தைகள் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது முசாபர்நகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி ராம் புத் சிங், விக்கிக்கு 4 ஆண்டுகள்  சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×