என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி கைது
Byமாலை மலர்10 Aug 2017 12:57 PM GMT (Updated: 10 Aug 2017 12:58 PM GMT)
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிக்கிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பாராமுல்லா மாவட்டத்தில் நாகா சோதனை சாவடி அருகே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆசாமி, போலீசாரை கண்டதும் ஓடத் தொடங்கினான். ஆனால், பாதுகாப்பு படையினர் அவனை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் ஜாமியா காதீம் சோபோர் பகுதியை சேர்ந்த இஷ்பக் அகமது கன்னா என்பதும், சமீபத்தில் தான் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவனிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவனைக் கைது செய்து அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, இவன்மீது சோபோர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பாராமுல்லா மாவட்டத்தில் நாகா சோதனை சாவடி அருகே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆசாமி, போலீசாரை கண்டதும் ஓடத் தொடங்கினான். ஆனால், பாதுகாப்பு படையினர் அவனை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் ஜாமியா காதீம் சோபோர் பகுதியை சேர்ந்த இஷ்பக் அகமது கன்னா என்பதும், சமீபத்தில் தான் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவனிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவனைக் கைது செய்து அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, இவன்மீது சோபோர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X