search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை: 5 மனைவிகளை மறைத்து 6-வது திருமணம் செய்ய முயன்ற நபர் சிக்கினார்
    X

    மும்பை: 5 மனைவிகளை மறைத்து 6-வது திருமணம் செய்ய முயன்ற நபர் சிக்கினார்

    மராட்டிய மாநிலத்தில் ஏற்கனவே நடந்த 5 திருமணங்களை மறைத்து, 6வதாக திருமணம் செய்ய முயன்ற ஆசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    மும்பை:

    மராட்டிய மாநிலம் மும்பையில் மும்ப்ரா பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து மகளுக்கு ஏற்ற வரனை தேட தொடங்கினார்.

    அப்போது இவர்களுக்கு அறிமுகமானவர் 32 வயதான வாலிபர். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், சொந்தமாக டிராவல் ஏஜென்சி நடத்தி வருவதாகவும் இவர் கூறியுள்ளார். இதை நம்பிய பெண் வீட்டார் அவருக்கு தனது பெண்ணை திருமணம் செய்ய முடிவுசெய்தனர்.

    இதைதொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கு போதிய பணம் இல்லாததால் பெண்ணின் பெற்றோர் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தனர்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்ணின் பெற்றோருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்,  ’’நீங்கள் பார்த்துள்ள மாப்பிள்ளை ஏற்கனவே 5 திருமணம் செய்து கொண்டவர். எனவே உங்கள் பெண்ணின் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம்’’ என தெரிவித்து, தொலைபேசியை உடனடியாக வைத்து விட்டனர்.



    இதனால் பெண்ணின் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள், மாப்பிள்ளையிடம் கேட்டதற்கு, அவர் தனது மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

    இதற்கிடையே, அந்த வாலிபர் ஏற்கனவே திருமணம் செய்த 4 மனைவியர்களும் கடந்த 22ம் தேதி பெண்ணின் பெற்றோர் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறி அழுதனர்.

    இதையடுத்து, பெண்ணின் பெற்றோர் கடந்த 28-ம் தேதி மும்ப்ரா போலீசில் புகார் செய்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில்  அந்த வாலிபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார்மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

    ஏற்கனவே நடந்த ஐந்து திருமணங்களை மறைத்து, ஆறாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் சிக்கியது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×