என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலியான ராணுவ ஆட்சேர்ப்பு கும்பல் சிக்கியது: ரூ.1.76 கோடி பணம் பறிமுதல்
Byமாலை மலர்24 May 2017 10:09 AM GMT (Updated: 24 May 2017 10:09 AM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்திற்கு ஆட்களை சேர்த்து விடுவதாக கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றிய கும்பல், கத்தை கத்தையாக பணத்துடன் சிக்கியுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவம் நடத்திய ஆள்சேர்ப்பு முகாம்களில் உடல் தகுதிப்பெற்ற இளைஞர்களிடம் ஒரு கும்பல் கட்டாயம் பணியில் சேர்த்து விடுவதாக பணம் வாங்கி மோசடி செய்து உள்ளது. இளைஞர்களின் படிப்பு சான்றிதழ்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி உள்ளது.
பல ஆண்டுகளாக நடந்த இந்த மோசடி தொடர்பான தகவல்கள் தெரியவந்ததும், ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ராணுவத்தின் உளவுப்பிரிவு ஜெய்ப்பூரில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது மோசடி கும்பல் சிக்கியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 1.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மோசடி கும்பல் ஒவ்வொரு இளைஞர்களிடமும் ரூ. 2 லட்சத்திற்கு மேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அர்ஜூன் சிங், நாத் சிங் ரத்தோர், சுனில் வியாஸ் மற்றும் மகேந்திர சிங் என நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உமேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.
அர்ஜூன் சிங்தான் இதற்கு மூளையாக செயல்பட்டு உள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. அர்ஜூன் சிங்கிடம் இருந்து இளைஞர்களின் படிப்பு சான்றிதழ்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவம் நடத்திய ஆள்சேர்ப்பு முகாம்களில் உடல் தகுதிப்பெற்ற இளைஞர்களிடம் ஒரு கும்பல் கட்டாயம் பணியில் சேர்த்து விடுவதாக பணம் வாங்கி மோசடி செய்து உள்ளது. இளைஞர்களின் படிப்பு சான்றிதழ்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி உள்ளது.
பல ஆண்டுகளாக நடந்த இந்த மோசடி தொடர்பான தகவல்கள் தெரியவந்ததும், ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ராணுவத்தின் உளவுப்பிரிவு ஜெய்ப்பூரில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது மோசடி கும்பல் சிக்கியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 1.79 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மோசடி கும்பல் ஒவ்வொரு இளைஞர்களிடமும் ரூ. 2 லட்சத்திற்கு மேல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அர்ஜூன் சிங், நாத் சிங் ரத்தோர், சுனில் வியாஸ் மற்றும் மகேந்திர சிங் என நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உமேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.
அர்ஜூன் சிங்தான் இதற்கு மூளையாக செயல்பட்டு உள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. அர்ஜூன் சிங்கிடம் இருந்து இளைஞர்களின் படிப்பு சான்றிதழ்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X