என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெங்கல் அருகே மத்திய குழுவினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதம்
Byமாலை மலர்21 Jan 2018 10:40 AM GMT (Updated: 21 Jan 2018 10:40 AM GMT)
வெங்கல் அருகே 100 நாட்கள் வேலை திட்டத்தில் 10 அல்லது 20 நாளைக்கு மட்டுமே வேலை தருவதாக கூறி மத்திய குழுவினரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள புன்னப்பாக்கம் கிராமத்துக்கு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால் தலைமையில் 20 பேர் கொண்ட பாராளுமன்ற குழுவினர் வந்தனர். அவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
அப்போது, ‘கிராம மக்கள் மத்திய குழுவினரை முற்றுகையிட்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 10 அல்லது 20 நாட்கள் மட்டுமே வேலை தருகின்றனர். கூலியும் பல மாதமாக வழங்கவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
இதையடுத்து சிலருக்கு மட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய குழுவினர் சென்றுவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி மத்திய குழு வினரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.
வெங்கல் அருகே உள்ள புன்னப்பாக்கம் கிராமத்துக்கு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால் தலைமையில் 20 பேர் கொண்ட பாராளுமன்ற குழுவினர் வந்தனர். அவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
அப்போது, ‘கிராம மக்கள் மத்திய குழுவினரை முற்றுகையிட்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 10 அல்லது 20 நாட்கள் மட்டுமே வேலை தருகின்றனர். கூலியும் பல மாதமாக வழங்கவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
இதையடுத்து சிலருக்கு மட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய குழுவினர் சென்றுவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி மத்திய குழு வினரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X