search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏனாமில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் ஜிப்மர் மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதி
    X

    ஏனாமில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் ஜிப்மர் மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதி

    புதுவையின் மற்றொரு பிராந்தியமான ஏனாமில் ரூ.48 கோடி மதிப்பில் ஜிப்மர் மருத்துவமனை தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று புதுவை ஜிப்மர் இயக்குனர் பரிஜா தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் இயக்குனர் பரிஜா கூறியதாவது:-

    புதுவையில் இயங்கி வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியின் கிளை காரைக்காலில் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

    காரைக்காலில் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை இயங்கி வருகிறது. இதற்கு மத்திய அரசு ரூ.490 கோடி ஒதுக்கியுள்ளது.

    ஜிப்மரின் மருத்துவ சேவையை மக்களுக்கு விரிவுபடுத்தும் நோக்கில் புதுவையின் மற்றொரு பிராந்தியமான ஏனாமில் ஜிப்மர் கிளை தொடங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

    ஏனாமில் ரூ.48 கோடி மதிப்பில் சிறப்பு மருத்துவ பிரிவு தொடங்கப்பட இருக்கிறது. இதில் அதிநவீன ரத்த சுத்திகரிப்பு மையம், இருதய அறுவை சிகிச்சை கூடம், பேறுகால சிகிச்சை மையம் ஆகியவை அமைக்கப்படும். இதன் மூலம் ஏனாம் மட்டுமல்லாது சுற்றியுள்ள ஆந்திர மாநில கிராமங்களை சேர்ந்த 30 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

    இவ்வாறு இயக்குனர் பரிஜா தெரிவித்தார்.
    Next Story
    ×