என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கள்ளக்குறிச்சி அருகே மணிமுத்தாறு அணையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது அகரகோட்டாளம் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் புவனேஸ்வரன் (வயது 13). அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் ரஞ்சித் (10). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் புவனேஸ்வரனும், ரஞ்சித்தும் அங்குள்ள மணிமுத்தாறு அணைக்கு மீன் பிடிக்க சென்றனர். அணையின் கரையில் இருந்து ரஞ்சித் தூண்டில் மூலம் மீன் பிடித்து கொண்டிருந்தான். அப்போது புவனேஸ்வரன் அணையின் கீழ் பகுதிக்கு சென்று மீன் பிடித்தான்.
சிறிது நேரத்தில் ரஞ்சித்தும் கீழே இறங்கி வந்தான். அப்போது கால் தவறி அணையில் உள்ள தண்ணீரில் விழுந்து விட்டான். அவனை காப்பாற்ற புவனேஸ்வரன் தண்ணீரில் குதித்தான். இருவரும் தண்ணீரில் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் மூச்சு திணறி மூழ்கி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று அணையில் மூழ்கி பலியான புவனேஸ்வரன், ரஞ்சித் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அணையில் மூழ்கி மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்