search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவளக்குப்பம் அருகே மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை
    X

    தவளக்குப்பம் அருகே மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை

    தவளக்குப்பம் அருகே நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். பால்காரர். இவரது தாய் சாரதாம்பாள் (வயது 74). இவர் வயது முதிர்ச்சியினாலும், ரத்த அழுத்தம் மற்றும் அல்சர் நோயினால் அவதி அடைந்து வந்தார். மருந்து- மாத்திரை சாப்பிட்டும் நோய் குணமாகவில்லை.

    இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த சாரதாம்பாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாரதாம்பாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மகன் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×