என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பஸ் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 18 ஆயிரம் பேருக்கு நோட்டீசு
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 நாட்கள் நீடித்த இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் அரசு பஸ் சேவை முடங்கியது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன்பிறகு 11-ந்தேதி முதல் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கி வருகிறது.
வேலைநிறுத்த போராட்டத்தின் தொடக்க நாளான 4-ந்தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
இதுபற்றி பொதுமக்கள் ஏராளமானோர் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு நடத்தி வேலைக்கு வராத ஊழியர்கள் பற்றி கணக்கெடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 1 லட்சம் ஊழியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மட்டும் 18 ஆயிரம் ஊழியர்களுக்கு நோட்டீசு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
ஒரே நாளில் 18 ஆயிரம் பேருக்கு அனுப்ப முடியாது என்பதால் தினமும் 2 ஆயிரம் பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்