search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காடு அருகே மண் சரிந்து விழுந்து இளம்பெண் பலி
    X

    களக்காடு அருகே மண் சரிந்து விழுந்து இளம்பெண் பலி

    களக்காடு அருகே ஆற்றில் மணல் திருடியபோது மண் சரிந்து விழுந்தது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள நம்பித்தலைவன் பட்டயத்தை சேர்ந்தவர் தங்க இசக்கி. கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது25). நேற்று இவர் திருக்குறுங்குடி நம்பியாற்றில் சாக்கு மூட்டையில் மணல் அள்ள சென்றார். ஆற்றுக்குள் ஒரு பகுதியில் குடைந்து மண் அள்ளிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கிருந்த மண் திட்டு அவர் மீது சரிந்து விழுந்தது. இதனால் மண் குவியலுக்குள் சிக்கிய மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×