என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேவகோட்டையில் ஆட்டோ டிரைவர் மர்ம மரணம்
தேவகோட்டை:
தேவகோட்டை புதுத் தெருவைச் சேர்ந்தவர் நைனா முகமது. இவரது மகன் சாகுல் அமீது (வயது 38). ஆட்டோ டிரைவர். இவருக்கு மது பழக்கம் இருந்து வந்தது.
நேற்று ஆட்டோ ஓட்டிச் சென்ற சாகுல் அமீது, மாலையில் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள விரிசல் ஆற்றுப் பாலத்தின் இறக்கத்தில் அவரது ஆட்டோ நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தேவகோட்டை நகர் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது ஆட்டோவும், அதன் அருகே சாகுல் அமீது உடலும் கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சாகுல் அமீது உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. எனவே அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவரை யாரேனும் தாக்கி கொலை செய்தார்களா? அல்லது குடி போதையில் சாகுல் அமீது ஆட்டோவை ஓட்டியதில் விபத்து ஏற்பட்டு பலியானாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்