என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பொன்னேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள் திடீர் வேலை நிறுத்தம்
Byமாலை மலர்11 Sep 2017 8:07 AM GMT (Updated: 11 Sep 2017 8:07 AM GMT)
ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பொன்னேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
7-வது ஊதிய குழுவன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பொன்னேரி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர்கள் யாரும் கல்லூரிக்கு வரவில்லை.
இதையடுத்து கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பேராசிரியர்களின் போராட்டத்தால் இன்று நடைபெற இருந்த எம்.பில் வேதியியல் நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X