search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் பேரணி
    X

    நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் பேரணி

    நாகர்கோவிலில் ஜூலை மாதத்துக்கான சம்பளம் வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவில்:

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதத்திற்கான சம்பளம் வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    ஆனால் நேற்று மதியம் வரை அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாமல் இருந்தது. எனவே சம்பள பணத்தை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் நாகர்கோவிலில் பேரணி நடந்தது. மத்தியாஸ் வார்டு பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் முன் இருந்து தொடங்கிய இந்த பேரணி கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

    பேரணியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் சங்கம், ஓய்வூதியர்கள் சங்கம் மற்றும் ஊழியர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் அனைவரும் திரளாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    இதுபோல பி.எம்.எஸ். சங்கம் சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகத்தில் அரை நிர்வாண போராட்டம் நடந்தது. அதாவது அனைவரும் சட்டை அணியாமல் போராட்டம் நடத்தினர்.
    Next Story
    ×