search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குகிறது: தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு
    X

    ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குகிறது: தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு

    ரம்ஜான் நோன்பு நாளை (28-ந் தேதி) தொடங்குகிறது என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாட்டிலும் மற்ற சில வெளிமாநிலங்களிலும் ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதும் நேற்று தென்படவில்லை. அப்படி பிறை தென்படாத சூழ்நிலையில், ரம்ஜான் மாதத்தின் முதல் தேதியை நோன்பின் முதல் நாளாக கருதலாம். அந்த வகையில் இஸ்லாமியர்கள் நாளை 28-ந் தேதியன்று ரம்ஜான் நோன்பைத் தொடங்குகிறார்கள்.

    இதுகுறித்து தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் கூறியதாவது:-

    ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று. தமிழகத்தில் 26-ந் தேதியன்று பிறை தென்படவில்லை. எனவே நாளை (28-ந் தேதி) நோன்பு தொடங்கும். அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை 27-ந் தேதி முதல் (இன்று) தொடங்கும்.

    ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். மாலையில் நோன்பு திறக்கப்படும். அதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நோன்பு இருக்கும் 27-ம் நாளை லைலத்துல்கத்ரு இரவாகவும், நோன்பின் கடைசி நாளை ரம்ஜான் பண்டிகையாகவும் இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். சென்னையில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க 60-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×