search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகமலை புதுக்கோட்டை அருகே பஸ் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி
    X

    நாகமலை புதுக்கோட்டை அருகே பஸ் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி

    நாகமலை புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் ஓட்டல் உரிமையாளர் பலியானார்.
    நாகமலை புதுக்கோட்டை:

    மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து குமுளிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் நாகமலை புதுக்கோட்டையை அடுத்த ராஜாம்பாடியை கடந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    அதில் மோட்டார் பைக்கில் வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இறந்தவர் உசிலம்பட்டி அருகே உள்ள மலம்பட்டி பகுதியை சேர்ந்த ராமு மகன் மலர்கொடி என தெரிய வந்தது. இவர் பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் ஓட்டல் நடத்தி வந்தார். தாயாரை பார்ப்பதற்காக ஊருக்கு வந்திருந்தபோது விபத்தில் சிக்கி பலியானது தெரிய வந்தது.
    Next Story
    ×